search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோடி பதவியேற்பு விழா"

    பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதாக கூறிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தற்போது தனது நிலையை மாற்றிக்கொண்டுள்ளார். இதேபோல் பினராயி விஜயனும் விழாவை புறக்கணித்துள்ளார்.
    கொல்கத்தா:

    பாராளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 352 தொகுதிகளை கைப்பற்றியது. பாஜக மட்டும் 302 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். வரும் 30-ம் தேதி ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

    மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும்படி பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.  பாராளுமன்ற தேர்தல் களத்தில் மோடியும் மம்தாவும் மோதிக்கொண்ட நிலையில், மோடியின் பதவியேற்பு விழாவில் மம்தா பங்கேற்பது கேள்விக்குறியாகவே இருந்தது.



    ஆனால், மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள உள்ளதாக மம்தா பானர்ஜி நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். பதவியேற்பு விழா என்பது ஒரு சம்பிரதாய நிகழ்வு என்பதால் கலந்துகொள்வதாக அவர் கூறியிருந்தார்.

    இந்நிலையில், தனது நிலைப்பாட்டை திடீரென மாற்றிய மம்தா, மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாட்டேன் என கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், “புதிய பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள். அழைப்பை ஏற்று பதவியேற்பு விழாவில் பங்கேற்க திட்டமிட்டிருந்தேன். எனினும், தவறான தகவலை பாஜகவினர் பரப்பி வரும் சூழ்நிலையில், பதவியேற்பு விழாவில் என்னால் பங்கேற்க இயலாது.

    மேற்கு வங்கத்தில் அரசியல் வன்முறையால் 54 பேர் கொல்லப்பட்டதாக பாஜகவினர் கூறுவதாக ஊடகங்களில் செய்தியை பார்த்தேன். அவர்கள்  கூறுவதில் உண்மையில்லை. 54 பேரும் அரசியல் ரீதியாக கொல்லப்படவில்லை; தனிப்பட்ட பிரச்சினையால் கொல்லப்பட்டனர். பதவியேற்பு விழாவை அரசியல் ஆதாயத்திறக்காக எந்த கட்சியும் பயன்படுத்தக் கூடாது.” என கூறியுள்ளார்.

    இதேபோல் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனும், மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள மாட்டார். இத்தகவலை கேரள முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

    டெல்லியில் மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க உள்ளேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நாடாளுமன்ற தேர்தல் வெற்றி மோடி என்ற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி. தலைவனை முன்னிறுத்தி தான் வெற்றி கிடைக்கும்.

    இந்திராகாந்தி, ராஜீவ் காந்தியை தொடர்ந்து மக்களை கவர்ந்த தலைவர் மோடி. தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை நிலவியது. டெல்லியில் மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க உள்ளேன்.

    தமிழகத்தில் செயல்படுத்திய திட்டங்களால் பாஜக தோல்வியை தழுவியுள்ளது. எதிர்க்கட்சிகளின் வலுவான பிரசாரமும் அதிமுக கூட்டணி தோல்வியடைய காரணம்.

    ராகுல் காந்தி பதவி விலக தேவையில்லை. எதிர்க்கட்சியின் செயல்பாடு முக்கியமானது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்படவில்லை.

    கோதாவரி, கிருஷ்ணா நதிகளை இணைப்பதாக கூறிய நித்ன் கட்கரிக்கு பாராட்டுக்கள். நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான வாக்குகள் பெற்ற கமல்ஹாசனுக்கு பாராட்டுக்கள் என தெரிவித்துள்ளார்.
    பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    பாரதிய ஜனதா கட்சி நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கிறது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

    மோடி பிரதமராக பதவியேற்கும் நிகழ்ச்சி டெல்லியில் வரும் 30ந்தேதி நடைபெற இருக்கிறது.

    இந்த நிகழ்ச்சிக்கு நாடு முழுவதிலும் உள்ள கூட்டணி கட்சி தலைவர்கள், முதல் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே மோடிக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.



    இந்நிலையில் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள அவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.

    ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து தனிக்கட்சி தொடங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். வரும் சட்டமன்ற தேர்தலில் களம் இறங்கவும் திட்டமிட்டுள்ளார்.

    ரஜினி எப்போதுமே பா.ஜனதா தலைவர்களுக்கு நெருக்கமாக இருந்து வருகிறார். அந்த அரசுக்கு ஆதரவான கருத்துகளையே தெரிவித்து வருகிறார். ரஜினிகாந்த், மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வாரா என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது:-

    ரஜினி மும்பையில் தொடங்க இருக்கும் தர்பார் படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்புக்காக நாளை மதியம் மும்பை செல்ல இருக்கிறார். அழைப்பை ஏற்றுக்கொள்வாரா இல்லை படப்பிடிப்பை காரணம் காட்டி செல்ல மாட்டாரா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.

    ஒருவேளை பங்கேற்கவில்லை என்றாலும் கூட மனைவி லதாவை அனுப்பி வாழ்த்துகள் தெரிவிப்பார்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதேபோல் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கும் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க  வருமாறு அழைப்பு  விடுக்கப்பட்டுள்ளது.



    ×